Sunday 12 January 2014

அனைவரும் வருக! வருக! என வரவேற்கிறோம்


Tamil Nadu Agricultural University Coimbatore




11.01.2014 - 13.01.2014
---விவசாயிகள் கண்காட்சி  அனைவரும் கண்டு மகிழுங்கள்---

Friday 10 January 2014

பொங்கள் திருநாள்


   பொங்கள் திருநாள்

தலைமுறைகள் பல கடந்து
     தமிழர்கள் வாழ்வு தனில்
உழவரை உயர்த்தி காட்ட
     வந்த நாள் இந்நாளாம்..!

மானிடர் வாழ்வு தனில்
     ஈடற்ற இன்பம் தந்து
மகிழவுற வந்த
     இனிய நாளம்..!

புது பயனம் தந்து
     வாழ்விற்கு அர்த்தம் தந்து
வாழ்கையின் பாதை தந்த
     இது ஒரு பொன்னாளாம்..!

ஏழைக்கு உணவு தந்து
     பசுவிற்கு பூசை செய்து
பிரிந்த சொந்தம் ஒன்றாகும்
     இது ஒரு நன்நாளாம்..!

இந்நாளே வாழ்விற்கு இன்பம் தந்த
     வாழ புது அர்த்தம் தந்த
வாழ்கை மகத்துவம் கூறும்
     பொங்கள் திருநாளாம்..!
     

காதலின் கண்ணீர்


           காதலின் கண்ணீர்

புது வார்த்தைகள்
நிறைய பயணங்கள்
அதன்
     இனிய நினைவுகள்
தோல் கொடுக்கும்
           தோழர்கள்
சோகம் மறக்க
           தோழிகள்
கண்ணீர் துடைக்கும்
           அண்ணன்
காயம் தீர்க்கும்
           பெற்றோர்
பாதை செதுக்கும்
           ஆசிரியர்கள்
கவிதை எழுத
           கண்ணீர்
கண்ணீர் தந்த
           பிரிவு
பிரிவை தந்த
           காதலி
இவை தந்த இறைவ
உனக்கு என் நன்றி..

தாய்மொழி கல்வி


                    தாய்மொழி கல்வி

தாய் நாடேன்போம்
   தாய்மண் காப்போம்
தாய்மொழி மட்டும்
   மறப்பது ஏனோ?

கற்றல் என்பது
   உள்ள வரை
தாய்மொழி கல்வி
   அவசியம் என்போம்!

உயிர் போகையில்
   துடிக்கையிலும்
தாய் மொழியினையே
   உச்சரிப்போம்!

வீணான விவாதத்தை
   விட்டு விட்டு
தாய்மொழிக் கல்வியை
   ஏற்றுக் கொள்வோம்!

வெற்றியைத் தான்
   தேடித்தர
சொந்த பந்தம்
   கூட வர,


உண்மையையோ
   எடுத்து சொல்ல
வன்முறையினை தான்
   கட்டு படுத்த

கண்ணீர் துடைத்து
   அறுதல் சொல்ல
தாய்மொழி கல்வி
   அவசியம் என்போம்...!